வெள்ளி, 21 மார்ச், 2014

போரென்று படைகொண்டு எல்லைக்குள்

பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்
புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்
நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்
தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்
மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல
மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள
மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா
மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக
தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது
தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக